Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேருந்து ஓட்டுனரின் கவனக்குறைவு…. தலை நசுங்கி பலியான பெண்…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

ஆம்னி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பெண் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி பகுதியில் பத்மநாபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் சங்கீதா வேளச்சேரியில் இருக்கும் வீடுகளில் வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சங்கீதா வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக வேளச்சேரி 100 அடி சாலையை சைக்கிளில் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி பேருந்தின் ஓட்டுநர் சங்கீதா நிற்பதை கவனிக்காமல் வாகனத்தை வலதுபுறமாக திரும்பியுள்ளார். இதனால் நிலை தடுமாறி சாலையில் விழுந்த சங்கீதா மீது பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதால் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதனை பார்த்ததும் ஆம்னி பேருந்தின் ஓட்டுனர் அச்சத்தில் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கீதாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆம்னி பேருந்தின் ஓட்டுனரான புஷ்பராஜ் என்பவரை  கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சங்கீதா பலியான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Categories

Tech |