Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்திற்கு ஆரஞ்ச் நிற எச்சரிக்கை… சற்றுமுன் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக்கடல் பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக்கும், தமிழ் நாட்டிற்கும் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை தெரிவித்திருந்தது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 25-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆக மாறக்கூடும். இதனால் நாளை முதல் சனிக்கிழமை வரை தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஒரே மாதத்தில் 3வது முறையாக வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |