Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மொத்தம் 71,000 நபர்கள்…. சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி…. கலெக்டரின் தகவல்….!!

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் 71 ஆயிரம் நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் கூட்டரங்கில் வைத்து முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடுத் திட்டம் மற்றும் பாரத பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயன் அடைந்த பயனாளிகளுக்கு பரிசுப்பொருட்கள், 30 பொதுமக்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு அட்டை, கைகள் மற்றும் கால்களை இழந்த 9 மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடுத் திட்டம் மூலமாக 8 லட்சம் மதிப்புடைய நவீன செயற்கை கால்கள் மற்றும் கைகள், மருத்துவ காப்பீட்டுத் துறையில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இதற்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, இம்மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டமானது அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் செயல்படுத்தப் படுகின்றது. இதில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலமாக இதுவரையில் 71,௦௦௦ நபர்களுக்கு 136 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்புடைய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.

அதன்பின் ஆண்டு வருமானம் 22 ஆயிரத்திற்கும் கீழ் உள்ளவர்களுக்கு காப்பீடு விண்ணப்ப படிவத்தில் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் கையொப்பம் பெற்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு தொடர்பாக பதிவு செய்யும் அறையில் புகைப்படம் எடுத்து பயனடையலாம் அவர் என கூறியுள்ளார்.

Categories

Tech |