காஷ்மீரில் பயங்கரவாத செயல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எனவே இதை தடுப்பதற்காக பாதுகாப்புப் படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பயங்கரவாதிகள் மீதுள்ள வழக்குகள் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் காஷ்மீரில் மனித உரிமை ஆர்வலர் குராம் பர்வேஷ் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டி வருகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
நலத்திட்ட பணிகள் செய்வதற்காக என்று கூறி தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நிதி திரட்டி அதனை காஷ்மீரில் பயங்கரவாத செயலை ஊக்கப்படுத்துவதற்காக பயன்படுத்தி வருகிறார். இதனால் அவர் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்த சமூக கூட்டணி அமைப்பு மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் சிவில் சமூக கூட்டணி அமைப்பு அலுவலகம் மற்றும் குராம் பர்வேஷ் வீடு போன்ற பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டது. அந்த சோதனையில் ஜம்மு காஷ்மீர் சிவில் சமூக கூட்டமைப்பின் அலுவலகத்தில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்பிறகு குராம் பர்வேஷிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி கைது செய்தனர்.