Categories
மாநில செய்திகள்

JUSTIN : 3 நாட்கள் அதிகனமழைக்கு வாய்ப்பு… வானிலை தகவல்…!!!

அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக்கும் தமிழ் நாட்டிற்கும் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 25 முதல் 27-ம் தேதி வரை அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஒரே மாதத்தில் 3-வது முறையாக வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் நவ.24, 25,26 கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், காரைக்கால், புதுச்சேரி, கேரளாவில் நவ.25-27ம் தேதி வரை அதி கன மழை பெய்யும் எனவும்  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |