Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து நேர்ந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரண்ராஜ் என்ற நண்பர் இருக்கின்றார். இதனை அடுத்து பாலசுப்பிரமணியன் மற்றும் சரண்ராஜ் ஆகிய இருவரும் இரு – சக்கர வாகனத்தில் துக்க வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது தீடீரென கட்டுப்பாட்டை இழந்த இரு – சக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் சரண்ராஜ் படுகாயமடைந்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் சரண்ராஜை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகு பாலசுப்பிரமணியனின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |