Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நாய் குறுக்கே வந்ததால்…. கோர விபத்தில் பறி போன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கார் கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள அருளாட்சி கிராமத்தில் முத்துச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசி என்ற மகன் இருந்துள்ளார். இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 21 – ஆம் தேதியன்று சசி தனது நண்பர்களான அரவிந்த், ராஜதுரை ஆகியோருடன் வாடகைக்கு கார் ஏற்பாடு செய்து சினிமா தியேட்டருக்கு படம் பார்க்க சென்றுள்ளனர். அந்த காரை விசுவநாத பிரசாத் என்ற டிரைவர் ஓட்டி வந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் சாலையில் நாய் குறுக்கே வந்துள்ளது. இதனை பார்த்ததும் விஸ்வநாத பிரசாத் காரை திருப்பியுள்ளார்.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் சசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் அரவிந்த் மற்றும் ராஜதுரை ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனைப் பார்த்த பொதுமக்கள் அரவிந்த் மற்றும் ராஜதுரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கார் டிரைவரான விசுவநாத பிரசாத்தை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |