Categories
மாநில செய்திகள்

தமிழக ஆசிரியர்களுக்கு 3 மாத ஊதியம்…. அரசு அரசாணை வெளியீடு….!!!!

தமிழகத்தில் அரசுத் துறைகளின் கீழ் பெரும்பாலான அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதன்படி பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வகையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நேரடி மற்றும் பதவி உயர்வு மூலம் வழங்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாகவும் சீனியாரிட்டி அடிப்படையில் சிலர் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். இவ்வாறு பணிநியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு முதலில் தற்காலிக பணி நியமனம் மட்டுமே வழங்கப்படும். அதன்பிறகு பணி வரன்முறை செய்யப்படுவார்கள்.

அவ்வகையில் கடந்த 2012 ஆம் ஆண்டு சீனியாரிட்டி அடிப்படையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு பணி வரன்முறை செய்யப்பட்ட அரசுப் பணியாக இருந்தாலும் கூட ஒவ்வொரு மூன்று மாதம் அல்லது ஐந்து மாதங்களுக்கு ஒருமுறை ஊதிய அரசாணை வெளியிடப்படும். அவர்களுக்கு பணி நியமனம் செய்யப்பட்ட நாள் முதலே தொடர் ஊதிய நீட்டிப்பு அரசாணை வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது 1591 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு இந்த நவம்பர் மாதம் முதல் மூன்று மாதங்களுக்கு ஊதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |