சென்னை உயர்நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக கடந்த ஜனவரி மாதம் சஞ்சய் பானர்ஜி நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் வரும் 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை இருக்கும் நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற உச்சநீதிமன்ற கொலிஜியம் குழு கூட்டத்தில் நீதிபதி சஞ்சீவ் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் அலகாபாத் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிமுனீஸ்வரர் நாத் பண்டாரியை சென்னை உயர்நீதி மன்றத்திற்கு மாற்றவும் கொலிஜியம் பரிந்துரை செய்தது.
அதன்படி நீதிபதி சஞ்சய் பேனர்ஜி மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றியும், நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி சென்னை நீதிமன்றத்திற்கு மாற்றியும் குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வரர் நாத் பண்டாரி சற்று நேரத்திற்கு முன்பு பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என் . ரவி, முதலமைச்சர் மு க ஸ்டாலின், நீதிபதிகள், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணைத்தலைவர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.