திருச்சி நவல்பட்டு எஸ்ஐ பூமிநாதன் திருடர்களால் நேற்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி நாவல்பட்டு பகுதியில் ஆடு திருடியவர்களை விரட்டிப் பிடிக்க எஸ்ஐ பூமிநாதன் முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் திடீரென மர்ம நபர்கள் அவரை சுற்றிவளைத்து கொலை செய்தனர். கொலையாளிகளை பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து எஸ்ஐ பூமிநாதன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 10 வயது சிறுவன், 17 வயது சிறுவன், 19 வயது இளைஞர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.