Categories
தேனி மாவட்ட செய்திகள்

கைவிட முடியாத பழக்கம்… ஜீப் டிரைவர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

குடிபழக்கத்தை கைவிட முடியாமல் ஜீப் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கெஞ்சையன்குளம் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். ஜீப் டிரைவரான இவருக்கு தாரணி என்ற மாற்று திறனாளி மனைவியும், கோகிலா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் பிரகாஷ்க்கு மதுபழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவரது உறவினர் மதுபழக்கத்தை கைவிடுமாறு கண்டித்துள்ளனர். இதனையடுத்து மதுபழக்கத்தை கைவிட முடியாமல் விரக்தியடைந்த பிரகாஷ் வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் பிரகாஷை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரகாஷ் உயிரிழந்தார். இதனையறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |