சுவிட்சர்லாந்து நாட்டின் மாநில அதிகாரிகள் 65 வயதுக்கு குறைவான நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்த தயார் நிலையில் இல்லை என்று கூறப்பட்டிருக்கிறது.
சுவிஸர்லாந்தில், 65 வயதுக்கு அதிகமான நபர்களுக்கும், தொற்று ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பவர்களுக்கும், பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இதற்கிடையில் நாட்டில் 65 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு எப்போது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்? என்பது குறித்த விவாதம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பல மாநிலங்கள் அடுத்த வருடம் வரை 65 வயதுக்கு குறைவான நபர்களுக்கு மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த வாய்ப்புகள் இல்லை என்று தெரிவித்திருக்கிறது. மேலும் தற்போது, தடுப்பூசி செலுத்த பதிவு செய்த மக்களையும் கிறிஸ்துமஸ் பண்டிகை வரை காத்திருக்குமாறு கூறியுள்ளனர்.
பெர்ன் மாநிலத்தில், தடுப்பூசி மையங்கள் அடைக்கப்பட்டிருப்பதாகவும், அதிகமான மையங்கள் அடைக்கப்பட்ட நிலையில் தான் இருக்கிறது என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதற்கிடையில், மருத்துவர்கள், மாநில அரசு தாமதமாக செயல்படுவது குறித்து விமர்சித்திருக்கிறார்கள். அனைத்து மக்களுக்கும், பூஸ்டர் தடுப்பூசி செலுத்த ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டால் தான் தாமதம் ஏற்படாமல் தடுப்பூசி செலுத்த முடியும் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.