பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அஞ்சுகுழிபட்டி பகுதியில் பிச்சைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் பிச்சைமுத்துக்கும், உறவினரான ஜமுனா என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி வடமதுரையில் இருக்கும் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர்.
அதன்பிறகு காதலர்கள் பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன் பிறகு மணமகளின் பெற்றோருடன் அவர்களை அனுப்பி வைத்துள்ளனர்.