கார்த்திக் ராஜ் தனது படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருப்பதாக கூறியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல ”கனா காணும் காலங்கள்” தொடரில் அறிமுகமானவர் கார்த்திக் ராஜ். இதனையடுத்து, இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான ”செம்பருத்தி” சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். செம்பருத்தி சீரியல் டி.ஆர்.பி.யிலும் முன்னிலை வகித்து ஹிட்டாக ஓடிக்கொண்டிருந்தது.
இந்நிலையில், இவர் கே ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் தனது படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருப்பதாக கூறியுள்ளார். போராட்டத்திற்கு பிறகு இறுதியாக தனது படத்தின் வேலைகள் ஆரம்பமாகி இருப்பதை மகிழ்ச்சியுடன் கார்த்திக் ராஜ் தெரிவித்து இருக்கிறார்.