கொரோனா தொற்று பரவலின் காரணமாக சென்ற ஆண்டு மார்ச் மாதம் முதல் மின்சார ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அத்தியாவசிய பயணிகளுக்கு மட்டும் மின்சார ரயில் இயக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் மத்திய தெற்கு ரயில்வே மண்டலம் 100% மின்சார ரயில் சேவையை ஆரம்பித்தது. தற்போது 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டு அனைவரும் மின்சார ரயில்களில் அனுமதிக்கப்படுகின்னர்.
இதில் மேற்கு ரயில்வேயில் விரார், போரிவிலி- சர்ச்கேட் இடையே நாள்தோறும் 12 ஏ.சி.மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மேற்கு ரயில்வேயில் கூடுதலாக மேலும் 8 ஏசி மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் பேசுகையில், பயணிகளின் வசதிக்காக வரும் 22ஆம் தேதி முதல் கூடுதலாக 8 புதிய ஏசி மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது. மேலும் இதன் மூலம் ஏசி மின்சார ரயில் சேவை 20-ஆக அதிகரிக்கும் என்று கூறியுள்ளார