மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டத்தில், ஊருக்குள் பாம்புகள் வந்ததையடுத்து, வனத்துறையினர் அதனை பிடித்து ஹரிசல் என்ற வனப்பகுதியில் விட்டுள்ளனர். அப்போது அவை நேராக மரத்தில் ஏறி ஒன்றோடொன்று பிணைந்து நின்று படமெடுத்துள்ளது.
இந்த மூன்று நாகப்பாம்புகளும் மரத்தடியில் சுருண்டு கிடப்பதை ராஜேந்திர செமால்கர் என்பவர் புகைப்படம் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இதுபோன்று 3 பாம்புகளும் ஒன்றாக சுருண்டு இருக்கும் காட்சிகளை காண்பது அரிதிலும் அரிது என கருத்து தெரிவிக்கின்றனர்.