Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு மீது தான் குற்றம்…. மல்லிகார்ஜூன கார்கே கருத்து..!!

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லியில் விவசாயிகள் கடந்த ஒரு ஆண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. இதற்கான நடைமுறைகள் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தொடங்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை விவசாயிகள் மகிழ்ச்சியாக வரவேற்றனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இதுகுறித்து பாராளுமன்ற உறுப்பினர் மல்லிகார்ஜூன கார்கே கூறியது, மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி தற்போது வெற்றியை அடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தான் குற்றம் செய்து இருப்பது என்று தெரிய வருகிறது. ஆனால் ஒவ்வொரு விவசாயிகள் பட்ட கஷ்டங்களுக்கு யார் பொறுப்பேற்பது? எனவே இந்த விவகாரங்களை பாராளுமன்றத்தில் எழுப்புவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |