Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நோட்டு, புத்தகம் வாங்க சென்ற மாணவன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. திருவாரூரில் சோகம்….!!

ரயிலில் அடிபட்டு மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள கொரடாச்சேரி காவல் சரகம் கொருக்கமேட்டையில் ராதா என்பவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் தொழில் செய்து வருகின்றார். இவருக்கு நவீன் என்ற மகன் இருந்தார். இதில் நவீன் குளிக்கரையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பயின்று வந்தார். இதனையடுத்து வழக்கம்போல் நவீன் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் நோட்டு, புத்தகம் வாங்குவதற்காக நவீன் தனது தாயிடம் 50 ரூபாய் பெற்றுக்கொண்டு வெளியில் சென்றார். அதன்பின் நீண்ட நேரமாகியும் நவீன் வீடு திரும்பவில்லை.

இதனால் அவரது பெற்றோர் நவீனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது ரயில் தண்டவாளம் அருகில் தலையில் அடிபட்டு நவீன் இறந்து கிடந்தது பெற்றோருக்கு தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நவீனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |