Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

3 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலதாழையூத்து பகுதியில் இசக்கி பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கிதுரை என்ற மகன் உள்ளார். இவர் அடிதடி, கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் காவல்துறையினர் இசக்கிதுரையை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து சீவலப்பேரி பகுதியில் வசிக்கும் தங்க சுடலை என்பவர் கொலை முயற்சி, அடிதடி, கொலை உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் காவல்துறையினர் தங்கசுடலையை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இதேபோன்று நாங்குநேரி பகுதியில் வசிக்கும் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் இசக்கிதுரை உள்ளிட்ட 3 பேரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் இசக்கி துரை உள்ளிட்ட 3 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையை பாளையங்கோட்டை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

Categories

Tech |