Categories
அரசியல் மாநில செய்திகள்

“ராஜேந்திர பாலாஜிக்கு புதிய சிக்கல்”…  உஷாராக அவர் செஞ்ச காரியத்தை பாருங்க…!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் புதிதாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 2011 முதல் 13 வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் கடந்த திமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஆவினில் இருந்து 1500 டன் கிலோ ஸ்வீட் பாக்ஸ் வாங்கி சென்றதாகவும், அவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆதாரங்களை சேகரித்து விசாரணை நடத்த மும்முரம் காட்டப்பட்டு வருகிறது.

ஆவினில் 100 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. இவை அனைத்தும் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக திரும்பியுள்ளது. இந்நிலையில் ஆவினில் வேலை வாங்கி தருவதாக புதியதாக இரண்டு வழக்குகள் ராஜேந்திர பாலாஜி மீது பாய்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் தனது உறவினர் ஒருவருக்கு ஆவின் நிறுவனத்தில் கிளை மேலாளராக பணி வாங்கித் தருவதாக கூறி 30 லட்சம் பணம் வாங்கியதாக அதிமுக பிரமுகர் விஜய் நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் மாரியப்பன் ஆகியோர் மீது மாவட்ட குற்றவியலில் புகார் அளித்துள்ளனர்.

அதிமுக பிரமுகரான விஜய் நல்லதம்பி கொடுத்த புகாரில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது உதவியாளர் மூலம் 1,06 கோடி பெற்றதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ராஜேந்திரபாலாஜி மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் பணத்தை இழந்தவர்கள் விஜய் நல்லதம்பியிடமே பணத்தை கொடுத்ததாகவும், எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கில் என்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |