ரயிலில் சென்று கொண்டிருந்த மருந்து நிறுவனத்தில் பொது மேலாளர் கிழே விழுந்து உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் ரகு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் மருந்து நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ரகு தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பழனிக்கு சென்றுவிட்டு மீண்டும் பழனி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து இரவு வாசலில் நின்று கொண்டிருந்த ரகு நாமக்கல் அருகே சென்றபோது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த ரயிலில் இருந்த பயணிகள் உடனடியாக நாமக்கல் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரகுவின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராவிர்க்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.