சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள லெச்சம்பட்டி பிரிவு சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சரவணன் மற்றும் வேல்முருகன் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் அவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வேல்முருகன் மற்றும் சரவணனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.