தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நந்தன் தட்டை கிராமத்தில் உச்சிமாகாளி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உச்சிமாகாளி அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை அவரது மனைவி ராமலட்சுமி கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த உச்சிமாகாளி திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பாப்பாகுடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உச்சிமாகாளியின் உடலை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.