டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு காற்றின் தரமானது மிகவும் மோசமடைந்துள்ளது. இதற்கு காரணம் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேவையில்லாத பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையினாலும் காற்றின் தரம் மோசம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் டெல்லியில் காற்று மாசு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேவைப்பட்டால் காற்று மாசுவை தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தி கொள்ளலாம் என்று உத்தரவிட்டது.
இதனால் டெல்லியில் உள்ள பள்ளிகள் ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாகவும், அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும் என்றும் டெல்லி அரசு உத்தரவிட்டது. மேலும் ஊரடங்கு அமல்படுத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்தது. இந்தநிலையில் ஹரியானா மாநிலத்திலும் காற்று மாசு காரணமாக 4 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.