ஆன்லைன் மூலமே தேர்வு நடத்த கோரி கல்லூரி மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டத்தில் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தினால் ஆன்லைன் மூலமே தேர்வு நடத்த வேண்டும் என மாணவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
இதனை அடுத்து சுமார் 12 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். அதன் பின்னர் தங்களின் கோரிக்கைகளை மனுவாக எழுதி மாவட்ட ஆட்சியரான முருகேஷிடம் கொடுத்துள்ளனர்.