கரூரில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல தனியார் மருத்துவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் தலைமறைவாகி விட்டதால் போலீசார் தேடி வருகின்றனர். கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் பிரபல தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு கணக்காளராக பணியாற்றும் பெண் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தனது 17 வயது மகளுக்கு தான் வேலை பார்க்கும் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ரஜினிகாந்த் பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார்.
எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி இருந்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட மருத்துவர் ரஜினிகாந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.. அவர் தலைமறைவாகி விட்டதால் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.