Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு…. தாயார் அளித்த புகார்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்திலுள்ள செம்பியக்குடி பகுதியில் ஞானம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2012-ஆம் ஆண்டு ஞானம் அப்பகுதியில் வசிக்கும் 5-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அழைத்துள்ளார். இதனை யாரிடமும் கூற கூடாது என அந்த சிறுவனை ஞானம் மிரட்டி உள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுவனின் தாயார் வெங்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஞானமை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் ஞானத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |