துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த ஆண்டு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.
அடுத்ததாக அவர் நடித்துள்ள குரூப் உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகி பாராட்டுகளை குவித்து வருகிறது. மலையாளம மட்டுமல்லாமல் தமிழிலும் குரூப் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் குரூப் வெளியாவதற்கு முன்பு படத்தின் பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்தார் துல்கர் சல்மான்.
அப்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் குறித்து துல்கர் சல்மானிடம் கேட்டபோது விஜய் ஒரு சூப்பர் ஹீரோ தூக்கத்தில் கூட சிரமம் இன்றி சிறப்பாக நடனம் ஆடுவார். வாத்தி கம்மிங் பாடலுக்கு அவரது நடனத்தை கண்டு ஆச்சரியப்பட்டேன் என்று வியப்புடன் பாராட்டி இருக்கிறார்.