Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கைது செய்யப்பட்ட 23 மீனவர்கள்… தொடர்ந்து சிறையில் அடைக்க உத்தரவு… குடும்பத்தினர் வேதனை…!!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேரை தொடர்ந்து 15ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த மாதம் 13ஆம் தேதி நாகை, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 23 மீனவர்கள் 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு சென்ற இலங்கை கடற்படையினர் திடீரென எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 23 பேரையும் கைது செய்தனர். இதனையடுத்து அவர்களை யாழ்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இதனைதொடர்ந்து நேற்று மீண்டும் மீனவர்களை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது வருகின்ற 15ஆம் தேதி வரை 23 மீனவர்களையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில் மீண்டும் மீனவர்களை சிறையில் அடைத்துள்ளனர். மேலும் மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த செய்தி மீனவர்களின் குடும்பங்களுக்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளது.

Categories

Tech |