Categories
மாவட்ட செய்திகள்

திருமண விருந்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டது…. ஆரல்வாய்மொழியில் பரபரப்பு….!!

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் தடுப்பூசி போடாதவர்கள் இல்லம் தேடிச் சென்று தடுப்பூசி போட வேண்டும் என்று  மாவட்ட ஆட்சியர்  அறிவித்துள்ளார். அதன்படி ஒவ்வொரு ஊரிலும் உள்ள அந்தந்த பகுதிகளை சேர்ந்த செவிலியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் குழுவாக அமைந்து வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் ஆரல்வாய்மொழி தாணுமலையான் புதூர் பகுதியில் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. அதன்பிறகு திருமணத்திற்கான மறுவீடு காணும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இதையடுத்து மணமக்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிரருந்தனர்.

அப்போது அங்கு வந்த கிராம சுகாதார செவிலியர்கள் சௌமியா, பரிமளா மற்றும் பெண் சுகாதார தன்னார்வலர் அசுபா ஆகியோர்கள் தடுப்பூசி மருந்து கொண்டு வந்து தடுப்பூசி போடாதவர்கள் யாரும் உண்டா? என்று கேட்டார். பின்னர் விருந்தில் கலந்து கொண்ட ஏழு பேருக்கு செல்போனின் மூலம் விவரங்கள் சேகரிக்கப்பட்டு இரண்டாவது தவனை தடுப்பூசி போடப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Categories

Tech |