தமிழ் வழியில் படித்தவர்கள் மற்றும் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் முதல் தலைமுறை பட்டதாரி, கொரோனா தொற்று காரணமாக பெற்றோரை இழந்தவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கும் இதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நாளிதழ் விளம்பரங்கள் வேலைவாய்ப்பகம் மூலம் மேற்கொள்ளப்படும் நேரடி பணி நியமனங்களில் இந்த இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories
BREAKING: தமிழ் வழியில் படித்தவர்களுக்கு… அரசு பணியில் முன்னுரிமை… அரசாணை வெளியீடு…!!!
