இலங்கையில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை பெய்து வருகிறது. மேலும் இலங்கையில் தொடர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் மாத்தளை, குருநாகல், களுத்துறை, கொழும்பு, காலி, பதுளை, கேகாலை, கண்டி, இரத்னபுரி, நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் மண்சரிவு மற்றும் பலத்த மழை உள்ளிட்ட அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே சுமார் ஆயிரக்கணக்கான வீடுகள் மழை வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.