குழந்தைகள் மற்றும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கனடாவில் ஒஷாவா என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் 70 வயதான அரசகுமார் சவரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் 25 ஆண்டுகளுக்கு முன்பாக சிறு குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. மேலும் 9 முதல் 14 வயதுடைய சிறுவர்களை இவர் பாலியல் வன்கொடுமை செய்த ஆதாரங்களின் அடிப்படையில் அரசகுமாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அதிலும் அவர் தனக்கு நல்ல அறிமுகமான குழந்தைகள் மற்றும் ஸ்கார்பரோ பகுதியில் உள்ள பெண்களையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி அரசகுமார் மீது அதிகாரப்பூர்வமாக 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அரசகுமாரால் பாதிக்கப்பட்டவர்கள் எவரும் இருப்பின் அவர்களும் போலீஸாரிடம் புகார் தெரிவிக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.