Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போடலையா? ரேஷன் பொருட்கள், கேஸ் கிடையாது…!!

குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பு ஊசியை செலுத்தி கொண்ட மக்களுக்கு மட்டுமே சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் மாவட்ட ஆட்சியர் சுனில் சவான் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மராட்டிய மாநிலத்தில் இதுவரை 74 விழுக்காடு பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மாவட்ட வாரியாக தடுப்பூசி செலுத்தியவர்கள் விபரம் வெளியிடப்பட்டது. இதில் அவுரங்காபாத் மாவட்டத்தில் வெறும் 55 விழுக்காடு பேர் மட்டுமே தடுப்பு ஊசி செலுத்தி இருக்கிறார்கள்.

இதையடுத்து அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள், சமையல் கியாஸ் ஏஜென்சிகள் மற்றும் பெட்ரோல் பங்குகளும் தடுப்பூசி சான்றிதழை சரிபார்க்க வேண்டும் எனவும், குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட மக்களுக்கு மட்டுமே, ரேஷன் பொருட்கள் மற்றும் பெரிய பொருள்களை வழங்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் எனவும், தெரிவித்து இருக்கிறார்கள்.

Categories

Tech |