ரயில் மோதி டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பழைய தர்மபுரி பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் லாரி டிரைவராக இருந்தார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 3 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் சுரேஷ்குமார் புலிக்கரை பகுதியில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தார். அப்போது அவ்வழியாக வந்த ரயில் சுரேஷ்குமார் மீது மோதியது.
இதனால் தூக்கி வீசப்பட்ட சுரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுரேஷ்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.