Categories
மாவட்ட செய்திகள்

பெண்ணை ஏமாற்றி பணம் மற்றும் நகை பறிமுதல்…. கணவன்,மனைவி கைது…!!

சென்னை பட்டாபிராம் தண்டரை பஜனை கோவில் தெருவில் ஜீவரத்தினம்(38) என்பவர் வசித்துவருகிறார். இவர் மனைவி சங்கீதா. இவர் தியாகராய நகரில் உள்ள கட்டுமான நிறுவனம் துறையில் பணிபுரிந்து வருகிறார். அப்போது அங்கு பணியாற்றிவரும் சூளைமேடு பகுதியை சேர்ந்த 23 வயது பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் மிக நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில் தன்னிடம் நெருக்கமாக இருந்த வீடியோவை சமூக வலைத் தளத்தில் வெளியிடுவதாக மிரட்டி அந்த பெண்ணிடம் 6,30,000 மற்றும் 22 பவுன் நகை ஜீவரத்தினம் பறித்துள்ளார். மேலும் தொடர்ந்து அவரை மிரட்டி வந்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது இதற்கு ஜீவரத்னத்தின் மனைவி சங்கீதாவும் தொடர்பு உண்டு என்று கூறினார். இந்த புகாரின் பேரில் சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து ஜீவரத்தினம் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரை நேற்று முன் தினம் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |