தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நல்ல மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த சூழலில் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து கடலூர் அருகே கரையைக் கடக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வானிலை செய்திக்குறிப்பில், வங்கக்கடலில் மையம் கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. சென்னைக்கு கிழக்கே, தென்கிழக்கே 430 கிலோ மீட்டர் தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமானது மையம் கொண்டுள்ளது. மேலும் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை 6 மணி அளவில் மாமல்லபுரம் கடற்கரை நோக்கி நெருங்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர பகுதிகளை நெருங்கும் என்பதனால் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.