தமிழகத்தில் தொடர் கனமழையின் காரணமாக, ஏற்கனவே பெரம்பலூர், அரியலூர், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் நாளை ஒரு நாள் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.