Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே…. புகார் தெரிவிக்க கூடுதலாக 3 வாட்ஸ்அப் எண்கள்….. மாநகராட்சி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முதல் கன மழை விடாமல் பெய்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து நேற்று நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்,மூன்று நாட்களுக்கு சென்னைக்கு யாரும் வரவேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தார்.அதுமட்டுமல்லாமல் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்திட உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் மழை, வெள்ள பாதிப்பு மற்றும் மரம் அகற்றம் தொடர்பான புகார்களை தெரிவிக்க கூடுதலாக மூன்று வாட்ஸ்அப் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் 9445025819, 9445025820, 9445025821 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும் 9445477205என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

Categories

Tech |