ராஷி கண்ணா புதிதாக ஒரு தமிழ் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஷி கண்ணா தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர். இவர் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”அரண்மனை 3”. இந்த படம் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து, இவர் ‘சைத்தான் கா பச்சா’ ‘சர்தார்’, ‘திருச்சிற்றம்பலம்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ராஷி கண்ணா மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் மீண்டும் சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.