Categories
மாநில செய்திகள்

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு?…. தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்….!!!

வங்க கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.தென்கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவிவருகிறது. இன்று தெற்கு வடகிழக்கு பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். அது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல்,நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும்.

மேலும் தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, கடலூர், புதுக்கோட்டை,டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவித்துள்ளது.அதுமட்டுமல்லாமல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆல் தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |