ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்துக்கு ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் சிபிஐ_யால் கைது செய்யப்பட்டு இன்றோடு 87 நாட்கள் ஆகின்றது. முதலில் அவர் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் 16ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் இந்த வழக்கில்தான் ஜாமீன் கேட்டு அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ஏற்கவே சிபிஐ_யால் கைது செய்யப்பட்டவர்களுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி விட்டது. இன்று ஜாமீன் வழங்கினால் அவர் வெளியே வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை முதலில் தள்ளுபடி செய்வதாக தெரிவித்துள்ளது.
இந்த ஜாமீன் மனு வழக்கில் நீதிபதி தன்னுடைய உத்தரவில் பொருளாதாரத்தால் இந்த நாடு பாதிக்கப்படும் என்று கூறி , அது சம்பந்தப்பட்ட வழக்கில் நாங்கள் நிச்சயமாக ஜாமீன் வழங்க மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக பொருளாதாரம் சம்பந்தப்பட்ட வழக்கு என்பது பொது மக்களை பெரிதும் பாதிக்கும். மேலும் இந்த வழக்கில் அமலாக்கத்துறை வெளிநாடுகளில் இருக்கக்கூடிய சொத்துக்கள் விவரங்கள் , அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த முழுமையான விவரங்களை சீல் வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்துள்ளனர். அதன் அடிப்படையில் தற்போது இந்த வழக்கில் ஜாமீனை நாங்கள் வழங்க முடியாது என்றும் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தெரிவித்தார்.