Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடங்கப்பட்ட கட்டுபாட்டு அறை… தயார் நிலையில் வீரர்கள்… அதிகாரி வெளியிட்ட தகவல்…!!

வடகிழக்கு பருவமழையையோட்டி பேரிடர் மீட்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் மாவட்டத்தில் வெள்ளம் போன்ற பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிக்காக 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர்.  இதனையடுத்து தாழ்வான பகுதிகள் மற்றும் எளிதில் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டம் முழுவதிலும் தன்னார்வக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு மழையால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக உடனடியான தீயணைப்பு கட்டுபாட்டு அறைக்கு 73050 95898 இந்த எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும்  தீ செயலி அல்லது  101, 112 ஆகிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் மாநில கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட தீயணைப்பு அலுவலர் கல்யாணகுமார் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |