Categories
உலக செய்திகள்

மந்திரிசபையில் மாற்றம்…. தலீபான்கள் தீவிர முயற்சி…. தகவல் வெளியிட்ட செய்தி தொடர்பாளர்….!!

ஆப்கான் மந்திரிசபையில் மாற்றம் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்வதாக தலீபான்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்களின் ஆட்சி அமைத்து வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் மந்திரிசபையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது குறித்து அந்நாட்டு அரசின் துணை செய்தி தொடர்பாளரான பிலால் கரிமி அவர்கள் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது, “மந்திரிசபை இன்னும் நிறைவு பெறவில்லை. எனவே, சமூகத்தின் பல்வேறு அம்சங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சிறந்த வல்லுனர்கள் மற்றும் திறமையாளர்களை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |