Categories
தேசிய செய்திகள்

“நீ காதலிக்க கூடாது” எதிர்ப்பு தெரிவித்ததால்…. 2 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்…!!!

மும்பையின் ராய்காட் பகுதியில் வசிப்பவர் சந்தோஷ்(30). இவர் தனது உறவுக்கார பெண்ணை காதலித்து வந்து உள்ளார். ஆனால் இந்த காதலுக்கு பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த ருத்ரா என்ற பெண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி ருத்ராவின் 2 வயது மகள் மாயமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமி, சந்தோசுடன் சென்றது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த சந்தோசை கைது செய்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையின் போது, அவர் சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்து, தலையை கல்லால் சிதைத்து சாலையில் போட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையியினர் அங்கு சென்று, சிறுமியின் உடலை மீட்டனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தவரின் மகளை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |