Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மின்சார மோட்டரை இயக்கிய கொத்தானார்… திடீரென ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சார மோட்டரை இயக்க சென்ற கொத்தனார் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்துள்ள கீழ்க்குடி கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். கொத்தனாரான இவர் சம்பவத்தன்று வீட்டில் உள்ள மின்சார மோட்டார் இயக்குவதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி சுப்ரமணியன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக சுப்பிரமணியனை மீட்டு திருவாடனை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுப்பிரமணியன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக  தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த தொண்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சுப்ரமணியனை மீட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |