சென்னையில் இன்று வரை 48 டன் பட்டாசு கழிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
சென்னையில் தீபாவளி அன்று குவிந்துகிடக்கும் பட்டாசு குப்பைகளை நீக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து இன்று காலை வரை 48 டன் பட்டாசு கழிவுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், சென்னையில் நாளை வரை பட்டாசு கழிவுகள் நீக்கப்பட உள்ளதாகவும், மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் தினமும் 5,200 டன் குப்பை சேகரிக்கப்படும் ஆனால் தீபாவளி அன்று குப்பையின் அளவு பல மடங்கு அதிகமாக இருப்பதால் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். மேலும் கடந்த ஆண்டு தீபாவளியின் போது 87 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.