Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வாகனத்தில் சென்ற முதியவர்… வழியில் ஏற்பட்ட விபரீதம்… கார் டிரைவர் கைது…!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலத்தை அடுத்துள்ள ஏ.ஆர் மங்கலம் கிராமத்தில் சந்தியாகு என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் இருசக்கர வாகனத்தில் ஆர்.எஸ்.மங்கலம் விலக்கு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதி வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் சந்தியாகு பலத்த காயம் அடைந்துள்ளார்.

இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக முதியவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சந்தியாகு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற ஆர்.எஸ்.மங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி முதியவர் மீது மோதிய கார் டிரைவரான பெங்களூரை சேர்ந்த விவாக் மணி என்பவர் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |