Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசின் திட்டங்களால் அதிகம் பயன் அடைவது தமிழ்நாடுதான்…  எல். முருகன் கருத்து..!!!

மத்திய அரசு கொண்டு வரும் நலத் திட்டங்களால் அதிகம் பயன் பெறுவது தமிழ்நாடு தான் என்று மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகரில் நடந்த மக்கள் ஆசி யாத்திரையில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: “மத்திய அரசின் திட்டங்களால் அதிக பயன் அடைந்த மாநிலமாக தமிழகம் இருக்கின்றது . மத்திய அரசு அறிவித்த இரண்டு நாள் ராணுவ தளவாட உற்பத்தி தொழில் தளவாடங்களில் ஒன்று உத்திரப் பிரதேசத்திற்கும், மற்றொன்று தமிழகத்திற்கும் ஒதுக்கப்பட்டது. மீன்வளத்துறை சார்பில் சென்னையில் சிறப்பு பொருளாதார கடற்பாசி பூங்கா 3 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

மீன்வளத்துறை மேம்பாட்டிற்கு 20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் 7 கோடி மதிப்பிலான பல திட்டங்கள் மூலம் தமிழ்நாடு பலன் அடைந்துள்ளது. பெட்ரோல் டீசல் ஜிஎஸ்டின் கீழ் கொண்டுவர பெரும்பாலான மாநிலங்கள் தயாராக இல்லை. பெட்ரோலுக்கு ரூபாய் 5 குறைக்க உள்ளதாக திமுக கூறி மூன்று ரூபாயை குறைத்தது. ஆனால் டீசல் விலையை குறைக்கவில்லை. மகளிருக்கு ஆயிரம் ரூபாய், பயிர்கடன், கல்விக்கடன் ஆகிய வாக்குறுதிகளுக்கான விவரங்கள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை” என்று அவர் திமுக அரசை குற்றம் சாட்டினார்.

Categories

Tech |