‘ஜெய் பீம் ‘ படம் குறித்து கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் ”ஜெய்பீம்”. பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
இந்நிலையில், இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் தனது கருத்துக்களை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ”கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக இயக்குனர் வெளிப்படுத்தி இருக்கிறார்”. என பதிவிட்டுள்ளார்.
#JaiBhim பார்த்தேன்.கண்கள் குளமானது.பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் @tjgnan பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த @Suriya_offl , ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். pic.twitter.com/YjSkfaeeiO
— Kamal Haasan (@ikamalhaasan) November 2, 2021